Saturday, December 13, 2008

காவல‌ர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் ‌நி‌தியுத‌வி: கருணாநிதி

வெள்ளி, 12 டிசம்பர் 2008( 15:05 IST )

திரு‌வ‌ண்ணாமலை‌யி‌ல் பாதுகா‌ப்பு ப‌ணி‌யி‌‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது மரண‌ம் அடை‌ந்த காவல‌ர் ச‌ந்‌திர‌ன் குடு‌‌ம்ப‌த்து‌க்கு ரூ.2 ல‌ட்ச‌ம் ‌நி‌தியுத‌வி வழ‌ங்‌கிட முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவண்ணாமலைக்கு கார்த்திகை தீபம் தொடர்பான பாதுகாப்பு பணிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் சந்திரன் இன்று இயற்கை எய்தினார்.

இதையொட்டி அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் இறந்த காவலர் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உடனடியாக வழங்கிடவும், அவரது வாரிசுதாரர் ஒருவருக்கு அரசுப்பணி அளித்திடவும் ஆணையிட்டுள்ளார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

0 பின்னூட்டங்கள்:

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP