Sunday, December 14, 2008

திருமங்கலம் இடைத் தேர்தல்-இன்று முதல் வேட்பு மனு தாக்கல்

மதுரை: மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (டிசம்பர்15) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய 22ம் தேதி கடைசி நாளாகும்.

இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அவை ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் புதிய திருப்பமாக லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ஆரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.




ஜனவரி 9ம் தேதி வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 12ம் தேதி நடக்கும். இந்தத் தேர்தலையொட்டி கடந்த 11ம் தேதி முதலே தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இந்தத் தொகுதியில் மொத்தம் 1,55,647 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 76,727 பேர் ஆண்கள். 78,920 பேர் பெண்கள். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் இங்கு அதிகம்.

0 பின்னூட்டங்கள்:

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP